கரண்ட் இல்லாமலும் அயர்ன்பாக்ஸில் அயர்ன் செய்யும் அழகைப் பாருங்க... இவனெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை...!

இந்த உலகமே ஆச்சர்யங்களும், வினோதங்களும் நிறைந்ததுதான். எப்போதும் நம்மைச் சுற்றி ஆச்சர்யம் சூழ்ந்த மனிதர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அதிலும் இப்போது ஒரு நபர் செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாகவே இன்று நம் தமிழகமும் சந்திக்கும் மிக முக்கியமானப் பிரச்சினைகளில் ஒன்றாக மின் வெட்டு உருவெடுத்துள்ளது. மின்சாரம் மட்டும் இல்லாவிட்டால் பலருக்கும் இயல்பு வாழ்க்கையே இன்று கேள்விக்குறியாகி விடுகிறது. அதனாலேயே இப்போதெல்லாம் வீட்டுக்கு, வீடு இன்வெர்டரும் வந்துவிட்டது. ஆனாலும், கரண்ட் இல்லாவிட்டாலும் என்னதான் இன்வெர்டர் வசதி இருந்தாலும், அயர்ன் பாக்ஸ் எல்லாம் பயன்படுத்த முடியாது. காரணம் அயர்ன் பாக்ஸ் 1000 வாட்ஸ் பவர் உள்ளது.

இப்படியான சூழலில் இங்கும் ஒருவர் வீட்டில் கரண்ட் இல்லை. அதேநேரம் அவசரமாக அவர் வெளியே செல்ல வேண்டும். உடனே அயர்ன்பாக்ஸை எடுத்து வைத்துக்கொண்டு, ஒரு இடத்தில் தீக்கொழுத்தி வைத்துவிட்டு அந்தத் தீ சூட்டில் அயர்ன் பாக்ஸைக் காட்டி, சட்டையை அயர்ன் செய்கிறார். யாருப்பா நீ? இப்படியொரு முட்டாள்தனமான அறிவா? என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துவருகின்றனர்.
பவர் கட்டா...?
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) April 26, 2022
கவலை வேண்டாம்...
அறிவுல நம்ம சங்கீகளை மிஞ்சிடுவான் போல..😁😁😁 pic.twitter.com/TKijL5tuzD